அரசாங்க வாகனங்கள் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை
அரசாங்க வாகனங்களின் பராமரிப்பை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்தின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
குறித்த சுற்றறிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு 25,000 கிலோமீற்றர் பயணத்திற்குப் பிறகும் அல்லது இயந்திர பழுதுபார்ப்புக்குப் பிறகும் ஆண்டுதோறும் எரிபொருள் செயல்திறனை சோதிக்க வேண்டும்.
எரிபொருள் நுகர்வு
சோதனைக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு எரிபொருள் நுகர்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டறியப்பட்டால், அது இயந்திரக் குறைபாடா அல்லது ஊழல் செயலா என்பதைத் தீர்மானிக்க வாகனங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் அந்த விடயத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, புதிய வழிகாட்டுதல்களில் வாகன பதிவு புத்தகங்களை முறையாகப் புதுப்பித்தல் மற்றும் ஆய்வு செய்வது தொடர்பான பல விதிமுறைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் போதெல்லாம் வாகனத்தை கழுவி சுத்தம் செய்வதற்கு சாரதி பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |