திட்டமிடப்பட்டு தமிழரசுக் கட்சியின் கைபொம்மையாக்கப்பட்ட மாவை !

Jaffna Mavai Senathirajah Death ITAK
By Shalini Balachandran Feb 02, 2025 03:11 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் திடீர் மறைவு தற்போது தமிழ் அரசியல் களத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகயீனம் காரணமாக கடந்த 28 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, 29 ஆம் திகதி தனது 82 ஆவது வயதில் உயிரிழந்தார்.

இந்தநிலையில், இவரது இழப்பு குறித்து தொடர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கு அரசியல் ரீதியான மன அழுத்தமும் காரணமென ஒரு தரப்பினர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழரசுக் கட்சியின் உள்ளக சிக்கல்கள் காரணமான அரசியல் அழுத்தங்கள் மற்றும் தொடர் சர்ச்சைகளினால் மனதளவில் அவர் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டமையும் மாவை சேனாதிராஜாவின் இழப்பிற்கு முக்கிய காரணமென சமூக ஊடகங்களில் இருந்து தென்னிலங்கை ஊடகம் வரை பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், இதன் காரணமாகத்தான் மாவையின் உறவினர்களும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களையும் மற்றும் சில தலைமைகளையும் மாவையின் இறுதி கிரிகைகளில் கூட கலந்துகொள்ள கூடாது என எச்சரித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், மாவையின் மரண வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது சமூக வலைதளத்தில் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

சுமந்திரன், மாவைக்கு வெளியிட்டுள்ள முகப்புத்தக இரங்கல் பதிவில் கருத்து வெளியிடும் பகுதியை (Comment Section) வரையறுத்துள்ள நிலையில் தங்களுக்கு தேவையானவர்களை தவிர வேறு எந்த ஒரு நபரின் கருத்துக்களையும் தவிர்த்து கொள்ள அவர் முற்படுவது வெட்ட வெளிச்சமாக புலப்படுகின்றது.

இவ்வாறான சில விடயங்களை உற்று நோக்கும் போது ஒரு வேளை மாவையின் உறவினர்களின் எச்சரிக்கை இவர்களுக்காக தானோ எனவும் ஒரு தரப்பினர் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு மரியாதை வழங்காப்படாமை, உள்ளக கட்சி மோதல், தலைவர் போட்டி மற்றும் தனிநபர் சுயநலம் என அவரவர் விருப்பிற்கு கைப்பாவையாக மாவையை உருட்டி விளையாடியதும் அணைவரும் அறிந்ததே.

காரணம், பொதுத்தேர்தலின் பின்னர் முதல் முறையாக இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கூட்டத்திற்கு வருவதற்கு தாமதமாகிய நிலையில், அவர் வந்த பின்பு கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் கோரப்பட்டிருந்தது.

இருப்பினும், என்னத்தான் இருந்தாலும் கட்சியின் தலைவர் என்பதை மறந்து அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடத்த முடியாது எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியின் தலைவரை அவமதிப்பது குறித்தும் கட்சியின் மூத்த தலைமையை மதிக்காமை குறித்தும் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த சாணக்கியனும் அதனை பொருட்படுத்தாத நிலையில், கேள்வியெழுப்பிய ஊடகங்களையும் முட்டாள் ஊடகங்கள் என கருத்து தெரிவித்திருந்தமை அறிந்ததே.

தமிழரசுக் கட்சியில் சிலருக்கு மற்றவர்கள் மீதான விமர்சனங்களை முன்வைக்க இருக்கும் தைரியம் தம்மை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வருவதில்லை.

இவ்வாறன சூழ்நிலைதான் தற்போதும் இடம்பெற்றுள்ளது காரணம், மாவையின் இறப்பிற்கு தென்னிலங்கை ஊடகங்கள் காட்டிய ஈடுபாட்டில் துளி அளவில் கூட தமிழரசுக் கட்சியில் சிலர் காட்டவில்லை என சமூக ஊடகங்கள் நகையாடுகின்றன.

யாருக்கு தெரியும், ஒருவேளை இனி வரும் காலங்களில் அவர்கள் மாவையின் இறப்பை பொருட்படுத்தாமல் அதையும் தமது அரசியல் சுய இலாபத்திற்கும், அனுதாபங்களுக்கும் உபயோகிக்கலாம், அவ்வாறு இருந்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மாவையின் இறப்பின் மீதான ஈடுபாடையும் தாண்டி தமிழரசுக் கட்சியில் சிலரின் சிறு பிள்ளை தனமான சுயலாப அரசியலே இங்கு பேசுப்பொருளாக மாறியுள்ளது, இருப்பினும் இதையும் தூசு போல தட்டிவிடும் அரசியல் களம்தான் தமிழ் அரசியல் களமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

விமர்சனங்களுக்கு அப்பால் மாவையின் இறப்பு தமிழ் அரசியல் களத்திற்கு பாரிய இழப்பு என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை, இவ்வளையும் தாண்டி இனி வரும் காலங்களில் சரி தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்காக என்ன செய்யபோகின்றது என்பது பாரிய கேள்வியாக தமிழ் மக்களிடையே வேரூன்றியுள்ளது. 

இந்தநிலையில், இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

வவுனியா இரட்டை கொலை சம்பவம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வவுனியா இரட்டை கொலை சம்பவம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி

தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி

யாழ். போதனாவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் : சிறீதரன் விசனம்

யாழ். போதனாவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட வைத்திய நிபுணர் : சிறீதரன் விசனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025