யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கட்டுநாயக்காவில் கைது
batticaloa
arrest
jaffna
bandaranayake airport
By Sumithiran
போலி விசாக்களை பயன்படுத்தி ருமேனியா நாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற நான்கு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரில் இருவருக்கு ருமேனிய விசா இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் துருக்கி இஸ்தான்புல்லிலிருந்து ஆபிரிக்க நாடானா சியாரா லியோனுக்கு செல்லும் விமானத்தில் ஏற இருந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நால்வரும் 21, 31, 36 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்