புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த கோரிக்கை - உயர் நீதிமன்றத்தில் மனு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை இரத்து செய்யுமாறு கோரி 27 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் இன்று (15.10.2024) உயர் நீதிமன்றத்தில் (Supreme Court of srilanka) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்..
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் (Department of Examinations) அமித் ஜயசுந்தர, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வருடம் நடத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் மீண்டும் அது நடத்தப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர நேற்று (14) இதனை கொழும்பில் (colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பரீட்சை வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் ஆராய்ந்த குழுவொன்று மீண்டும் பரீட்சையை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று பரிந்துரைத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |