பிரான்ஸில் உள்ளூராட்சி தேர்தல் : வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள்
பிரான்ஸில் இன்று (15) நடைபெற்று வரும் உள்ளூராட்சி தேர்தல் களத்தில் புலம்பெயர் தமிழர்கள் உட்பட ஏராளமான வாக்காளர்கள் இன்று காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.
பிரான்சில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சினைகள் பின்னிப்பிணைந்துள்ள பின்னணியில் அடுத்த ஆண்டு இடம்பெறும் அரச தேர்தல் களத்தின் நாடிபிடிப்பாக இன்றைய உள்ளூராட்சி தேர்தல் நோக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் பரிஸ் புறநகரப்பகுதிகள் உட்பட்ட பகுதிகளில் ஈழத்தமிழ் மற்றும் புதுச்சேரி பூர்வீகத்தை சேர்ந்த 130 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
35,000 உள்ளூராட்சிகளுக்கு நடைபெறும் தேர்தல்
48.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க கூடிய இன்றைய தேர்தலானது மாநகர சபைகள் மற்றும் நகரசபைகள் உட்பட 35,000 உள்ளூராட்சிகளுக்கு நடைபெறுகின்றன.

இவற்றில் 93 வீதமான உள்ளூர்வாசிகளுக்கு இன்றைய முதற்சுற்று வாக்களிப்பின் பின்னர் இறுதி முடிவுகளை அறியமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஏனைய 7 சத வீதத்துக்குரிய உள்ளூராட்சிகள் மற்றும் பெருநகரங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறும் இரண்டாம் சுற்று வாக்களிப்பு தான் இறுதி முடிவுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தல் களத்தில் உள்ள 130 புலம்பெயர் தமிழர்களில் 90 பேர் ஈழத் தமிழ் பூர்வீகத்திலும் ஏனையோர் புதுச்சேரி பூர்வீகத்திலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |