தளர்வுகளை அறிவித்தது பிரான்ஸ் அரசாங்கம்
பிரித்தானியாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை இன்று வெள்ளிக்கிழமை முதல் தளர்த்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொண்டவர்கள், கட்டாயமான காரணங்கள் இன்றியும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்றியும் பிரான்சிற்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் இருந்து வருகைதருவோருக்கு கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவந்திருந்தது.
இதன்பிரகாரம் கட்டாயமான காரணம் இன்றி பிரான்சிற்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டதுடன், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடுப்பூசி மருந்து சான்றிதழை கட்டாயமாக்கியுள்ள பிரான்ஸ், பிரித்தானியாவில் இருந்து செல்வோருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் இன்று(14) முதல் தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.
எனினும் பிரித்தானியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ்சில் கொவிட் 19 தொற்றானது தொடர்ந்தும் தீவிரமடைந்துவரும் அதேவேளை இறுதியாக இன்று வியாழக்கிழமை 03 இலட்சத்து 68 ஆயிரத்து 817 பேர் புதிததாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.