ஈரான் இராஜதந்திரத்தில் பிரான்ஸின் தலையீடு! உளவுத்துறையினரிடம் சிக்கிய தூதர்கள்
தேசியப் பாதுகாப்பு விசாரணை ஒன்றின்போது வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் ஈரானால் தடுத்து வைக்கப்பட்டதாக மத்திய கிழக்கு தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் தலையீடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்போது, உளவுப் பிரிவுகள் அந்த இரண்டு தூதர்களையும் தடுத்து வைத்ததாக அந்நாட்டு தரப்புக்கள் விளக்கியுள்ளன.
பின்னர் பிரான்ஸ் தூதரிடம் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் ஆரம்பகட்ட பரிசோதனையில், “செல்வாக்கைக் கட்டியெழுப்புதல், வெளிநாட்டுத் தலையீடு மற்றும் ஈரானின் சுதந்திரத்தை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கான நிலைமைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய அளவிலான திட்டம்” தெரியவந்ததாக அமைச்சகம் கூறியுள்ளது.
இராஜதந்திர அந்தஸ்து
கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில், ஈரானுக்கான பிரான்ஸின் முன்னாள் தூதரின் கையொப்பம் கண்டறியப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் "இராஜதந்திர அந்தஸ்து கொண்ட நபர்கள் சட்டவிரோத மற்றும் தலையீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க மாட்டோம்" என்று அமைச்சகம் வலியுறுத்தியதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |