இலங்கை டயஸ்போராவுக்கு திடீர் பலன்
இலங்கையில் அடிக்கடி தொடருந்து தடம்புரள்வது போல இலங்கை ரூபாயின் பெறுமதி அடிக்கடி தடம்புரளும் நிலையில் மீண்டும் ஒரு பெறுமதிச் சரிவுக்கு உள்ளாகிவரும் நாணயத்தை நிமிர்த்துவதற்கு அநுர அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பது இப்போதுள்ள ஒரு முக்கிய வினா.
தற்போதைய சரிவு 2022 இல் கோட்டாபய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வரலாற்று நாணயச் சரிவுபோன்றதல்ல. எனினும் இலங்கை நாணயம் இப்போது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 328 ரூபாய்க்கு அதிகமாகவும் யூரோ ஒன்றுக்கு 382 ரூபாய்க்கு அதிகமாகவும் பிரித்தானிய பவுண்ஸ் 439 ருபாய்க்கு அதிகமான பெறுமதிக்கும் வந்துவிட்டது.
இதனால் புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்புவோருக்கு நிலைமை குட்டி சந்தோசத்தை வழங்கிவருகிறது. ஆனால் இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைவது, அங்கு வாழும் மக்களுக்கு விலைவாசி ஏற்றம் உட்பட்ட எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
இலங்கை நாணய பெறுமதி குறைவது இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆதாயமாகும் என்றாலும் இப்போது சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அதிகளவு இணைய மோசடியாளர்கள் இலங்கையில் இறங்கிவிடுவது இன்னொரு சிக்கலாக இருக்க இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |