மேலும் குறைக்கப்படவுள்ள எரிபொருள்களின் விலை..! சிறிலங்கா அரசாங்கம் தகவல்
அடுத்த இரு வாரங்களில் எரிபொருள்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
14-15 நாட்களில்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பெட்ரோல் விற்பனையில் 70 ரூபாய் இருந்ததால் அதனை 40 ரூபாவால் குறைக்க முடிந்தது. டீசல் விற்பனையில் நட்டம் ஏற்பட்டுள்ளதால் அதனை குறைக்க முடியாது.
அண்மைய விலை திருத்தத்தின் போது டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் டீசல் விற்பனையில் ஒரு ரூபாய் இலாபமே கிடைத்தது.
நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 30 வீதம் மட்டுமே உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், அதற்கேற்ப விலையை குறைக்க முடியாது.
எனினும், 14-15 நாட்களில் எரிபொருள் விலைகள் மேலும் குறைக்கப்படும் ", எனக் குறிப்பிட்டார்.