எரிபொருள் விலை குறைப்பு - பஸில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
price
fuel
basil rajapaksha
By Sumithiran
உடனே விலை குறைக்க எரிபொருள் ஒன்றும் அரிசி தேங்காய் போன்றது அல்ல என நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நான் விருப்பத்துடனேயே உள்ளேன். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது..
டொலர்களில் வௌிநாட்டுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் வியாபாரமாக எரிபொருள் இருப்பதால் அரிசி, தேங்காய் போன்று எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது. உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அரிசி, தேங்காய் போன்றவற்றின் விலைகளை குறைப்பது போல எரிபொருள்களின் விலைகளை உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தில் 6000 பேர் பணியாற்றுகின்றனர் ஆனால் ஒபேக்கில் 300 பேரே பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி