முழுமையான கடன் தள்ளுபடி! ரணிலின் விசேட அறிவிப்பு
விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறைநிரப்பு பிரேரணை
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் இன்றைய தினம் முன்வைத்துள்ளார்.
695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை இவ்வாறு பிரதமரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த கடன் தொகை தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
எரிபொருட்களின் விலை அதிகரிக்கும்: நெருக்கடியை எதிர் கொள்ள தயாராகுங்கள்! ரணில் அதிரடி அறிவிப்பு
நாடுமுழுவதும் ஆயுதம் தாங்கிய படையினர் - சற்று முன்னர் பிறப்பிக்கப்பட்ட கட்டளை!
மேலும் ஒரு ட்ரில்லியன் பணம் அச்சிடப்பட்ட வேண்டும்: நாடாளுமன்றில் ரணில் பகிரங்கம்(நேரலை)