மோடிக்கு சல்யூட்..! ஜின்பிங்குடன் எதிர்பாராத சந்திப்பு - தலைமையேற்கும் இந்தியா
உலகளவில் பொருளாதாரம் சார்ந்த வளரும், வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றாக ஜி20 அமைப்பு உள்ளது.
இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உட்பட 20 நாடுகள் உள்ளன.
ஜி20 உச்சி மாநாடு

இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையவுள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்தார்.
குறிப்பாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து நட்பு ரீதியாக பேசினார்.
அவர் பிரதமரான நிலையில் முதல் சந்திப்பு என்பதால் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மோடி - ஜி ஜின்பிங் எதிர்பாராத சந்திப்பு

மேலும் நேற்று இரவு உணவு வேளையில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கைகுலுக்கி சந்தித்து கொண்டுள்ளனர்.
அத்தோடு, ஜி20 மாநாட்டின் இறுதி நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது.

அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில்
இதேவேளை, ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதற்கான தலைமைத்துவம் இன்றைய ஜி20 மாநாட்டின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.