கண்டாவளை வைத்தியாலைக்கு நிரந்தர வைத்திய அதிகாரியாக கஜேந்திரா நியமனம்!
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா (Gajendra) நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார பணிமனை உறுதிப்படுத்தியது.
பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த கண்டாவளை வைத்தியசாலையின் விவகாரத்தின் பின்னர் புதிய வைத்திய அதிகாரியாக கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் உறுதிப்படுத்துவது கடினமாக இருந்திருந்தது.
எனினும் இது தொடர்பான உறுதிப்படுத்தலினை இன்றைய தினம் வடமாகாண சுகாதார பணிமனை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நேற்றைய தினம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரவித்திருந்த விடயம்,
கண்டாவளை பிரதேசத்தின் மருத்துவ சேவைகளை இலகுப்படுத்தும் வகையிலும், நிர்வாக செயற்பாடுகள் இலகுவாக முன்னெடுக்கும் வகையிலும் இந் நியமனத்தை மேற்கொண்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டாவளை பிரதேசத்தின் மேலதிக பொறுப்பு வைத்திய அதிகாரியாக மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் கடமையாற்றி வரும் நிலையில் நேற்றையதினம் மருத்துவர் கஜேந்திராவும் கரைச்சிக்கு மேலதிகமாக கண்டாவளைக்கும் நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தது.
மேலும், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் பதில் கடமை வைத்தியருக்கும் பிறிதொருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த வைத்தியருடன் பேசிய உரையாடல் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்தமை தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்குக் குறித்த பெண் வைத்தியர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தார்.
இவ்வாறான நிலையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு நிரந்தர வைத்தியராக கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
