கஜேந்திரகுமாரின் சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கை..!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். காவல்துறை அதிகாரிகளால் அண்மையில் அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை கோருவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைவில் வழங்குமாறு யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களுடன் இருந்த போது சில காவல்துறை உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
விசேட அறிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் நாளை (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை கோருவதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
