தையிட்டி விகாரை விவகாரம் : வாக்குமூலம் வழங்க சென்ற தமிழர் தரப்புக்கு நேர்ந்த கதி
தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran), வாசுகி சுதாகரன், வேலன் சுவாமி உள்ளிட்டோர் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி (Palali) காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டம் தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய காவல்துறையினரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதற்காக அழைக்கப்பட்ட மூவரையும் இன்று (20.02.2025) 12 மணிக்கு காவல்நிலையத்திற்கு சமூகம் அளிக்குமாறு தெரிவித்த நிலையில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்கச் செய்ததுடன் அதன் பின்னர் நீண்ட மணி நேரம் அவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாக வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்
குறித்த சட்டவிரோத விகாரை தொடர்பாக பிரதேசசெயலகம் மற்றும் அரச திணைக் கழகங்களிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது தொடர்பிலும் காவல்துறையினர் பல கோணங்களில் கேள்விகளை எழுப்பியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களின் உறுதியுள்ள காணிகள் என்பதை அரச திணைக்களங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன என்ற விடயத்தை காவல்துறையினருக்கு தெரியப்படுத்திய நிலையில் தாம் குறித்த விகாரை அகற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள காணொளியை காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 20 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்