காலியில் டெல்டா திரிபு பரவல்?
corona
people
sr lanka
By Shalini
காலி - பத்தேகம பிரதேசத்தில் இருவர் டெல்டா கொரோனா திரிபினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இருவரும் ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பை பேணிய 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பத்தேக பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
மேற்படி தொற்றாளர்கள் இருவரும், பத்தேகம - வடக்கு மற்றும் திலக உதாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்