சிறிலங்கா படைத்தரப்பின் கோரமுகம்! நள்ளிரவில் கதறக் கதற ஓடிய மக்கள்..! நடந்தது என்ன..! (Video)
போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்
சிறிலங்காவின் புதிய அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் சிறிலங்காவின் படையினர் 'கோட்டா கோகம' போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.
அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் - யுவதிகள் தங்கியிருந்த இடத்திற்குள் அதிகாலை 1.30 மணியளவில் நவீன இயந்திரத் துப்பாக்கிகள் சகிதமாக திடீரென்று நுழைந்த சிறிலங்கா படையினர், போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை அங்கிருந்து விரட்டியிருந்தார்கள்.
பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் - என எந்தவித பாகுபாடும் இன்றி அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.
போதைவஸ்து பாவித்துவிட்டு மக்களை தாக்கியதா சிறிலங்கா கடற்படை
நள்ளிரவில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட அந்தத்தாக்குதல் பற்றிக் குறிப்பிடும் போராட்டக்காரர்கள், 'தம்மீது தாக்குதல் நடாத்திய கடற்படைவீரர்கள் ஒருவித போதையில் இருந்தார்கள்' என்றும் தெரிவிக்கின்றார்கள்.
வெறிகொண்டவர்கள் போன்று அன்றைய தினம் சிறிலங்கா கடற்படையினர் நடந்துகொண்டதாகவும், கதறக் கதற தம்மீது அவர்கள் இரக்கமற்று தாக்குதல் நடாத்தியதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
- சிறிலங்கா படைத்துறை போதைப்பொருட்கள் பாவித்துவிட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையானதா?
- போதைப் பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான தண்டணைகள் நடைமுறையில் இருக்கின்ற சிறிலங்காவில், கடமையில் இருக்கும் கடற்படைவீரர்கள் போதைவஸ்துக்கள் பாவித்திருப்பதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா?
- ஒருவேளை கடற்படையினர் போதைவஸ்து பாவித்திருந்தது உண்மையானால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை சிறிலங்கா அரசு எடுக்குமா?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத்தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,