வெதுப்பாக உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
எரிவாயு விலை திருத்தினால் வெதுப்பகம் தொடர்பான பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவின் விலை 334 ரூபாவாக அதிகரிக்கப்பட்டாலும் உணவு மற்றும் பானங்களின் விலையை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் தற்போது நுகர்வோர் மூன்று மடங்கு நஷ்டம் அடைந்துள்ளார் எனவும் இதன் காரணமாக நுகர்வோரின் நலன் கருதி இந்த நிவாரணத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாவாகும்.
நேற்று முதல் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.1,904 ஆகவும், 2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.883 ஆகவும் உயர்ந்துள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.