ஜனாதிபதியின் உத்தரவில் வெளியான விசேட வர்த்தமானி
Anura Dissanayake
National People's Power - NPP
NPP Government
By Thulsi
நாட்டில் நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அறிவுறுத்தலின் படி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பொது அவசரகால நிலை
அத்துடன், சுகாதாரம், மின்சாரம், நீர், பெற்றோலிய விநியோகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களை தொடர்ந்து மக்களுக்கு நேர்த்தியான சேவைகளை வழங்கும் நோக்கில் பொது அவசரகால நிலை கடந்த நவம்பர் 29ஆம் திகதி நடைபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்