முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மேலும் பல நிறுவனங்கள்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
அதிவிசேட வர்த்தமானி
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மேலும் பல நிறுவனங்களை ஒதுக்குவதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அதிவிசேட வர்த்தமானியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் (RALL) உள்ளிட்ட முக்கிய மூன்று நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள்
Selendiva Investments Limited மற்றும் Hotel Developers (Lanka) Pvt Limited ஆகிய இரண்டும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு நிறுவனங்களாகும்.
முன்னதாக, ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது.
Selendiva Investments Ltd மற்றும் Hotel Developers (Lanka) Pvt Ltd ஆகிவை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

