உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறித்த விடயத்தினை கூறியுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும்
தொடர்ந்து அவர்,
"நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாகவே இடம்பெறுகின்றது.
இதன்காரணமாக, கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும்.
ஆசியரியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடருமாயின், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகளும் தாமதமாகலாம்.
விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அமைச்சரவை அங்கீகாரத்துடன் அதிகரித்துள்ள போதிலும், போதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்." இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
