2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தினால் (Department of Examinations) வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், 2025 ஆண்டு ஆம் க.பொ .த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையுமென்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
எக்காரணம் கொண்டும் அது நீடிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால், பின்வரும் தொலைபேசி இக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 0112-784208/ 0112-784537/ 0112-785922.
அத்துடன் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
