கலஹாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல்லால் மக்கள் பதற்றம்!
கண்டி, கலஹாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் என சந்தேகிக்கப்படும் ஒரு பாறையின் மாதிரிகளை சேகரிக்க சென்ற தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகள் ஆணையத்தின் அதிகாரிகளை அங்குள்ள பிரதேச மக்கள் தடுத்ததையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகளைத் தொடர்ந்து, கலஹா, தெல்தொட்ட கீழ் கல்லந்தன்ன பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் அருகில் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டது.
மாதிரிகள்
குறித்த பகுதியில் வசிக்கும் ஒருவர் இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தின் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று பாறையின் மூன்று துண்டுகளை மாதிரிகளாக சேகரித்துக் கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இவ்வாறு மாதிரிகளை சேகரிக்கச் சென்ற அதிகாரிகளை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு, இந்த மாதிரிகளை எடுப்பதற்கான நோக்கம் தொடர்பில் கேள்வியெழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அதிகாரிகள் காரணத்தை விளக்கிய பின்னர் அங்குள்ள சிலர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் மாதிரி பாறைத் துண்டுகளை பரிசோதனைகளுக்கு எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |