இஸ்ரேலுக்கு பேரிடி : ஆயுத விநியோகத்தை நிறுத்திய முக்கிய நாடு
காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்த நிலையில், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
காசாவை கைப்பற்ற அனுமதியை பெற்ற நெதன்யாகு
பிணைக்கைதிகள் அங்கு இருக்கக் கூடும் என்பதால், அவர்கள் இறக்க நேரிடும் என கூறி இஸ்ரேல் இராணுவ தளபதி எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பையும் மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதலை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் பெற்றார்.
இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜெர்மனி சான்சிலரின் அறிவிப்பு
இந்நிலையில் ஜெர்மனி சான்சிலர் பிரெட்ரிச் மெர்ஸ் கூறுகையில், “காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தால் அந்நாட்டுக்கான இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதியை நிறுத்தி உள்ளோம்.
''இஸ்ரேல் அரசு காசாவின் பொதுமக்களுக்கு உதவி வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஐ.நா., அமைப்புகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா
