போதைப்பொருள் கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது!
போதைப்பொருள் கொடுத்து 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்களை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் "டிக்டொக் கிரி சமன்" உட்பட நான்கு இளைஞர்கள் மற்றும் இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஆபத்தான போதைப்பொருளை உட்கொண்டதை சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா உறுதிப்படுத்தியதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பேச்சு குறைபாடுள்ள பெற்றோரைக் கொண்ட தம்பதியரின் ஒரே மகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர்கள் இந்த சிறுமியை பலமுறை இரவுநேர விருந்தகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அவரை மது அருந்தவும் பழக்கப்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 மற்றும் 22 வயதுடைய ராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.