தாயின் அனுமதியுடன் சிறுமி துஷ்பிரயோகம் - மூவர் கைது
பதுளையில் தாயின் அனுமதியோடு 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வயிற்று வலி காரணமாக குறித்த சிறுமி ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது , வைத்தியர்களால் மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 4 மாத கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
காவல் துறையினர் மேற்க்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும் இரண்டாவது சந்தேக நபர் பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய 7 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது சந்தேகநபர் ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சம்பவம் தொடர்பில் ஹாலிஎல காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
