உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிணைந்த மாநாடு வொஷிங்டனில் நேற்று ஆரம்பமானது.
குறித்த மாநாட்டில் கருத்துரைக்கும் போதே டேவிட் மல்பாஸ் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

இதேவேளை, இயற்கை எரிவாயுக்களின் விலைகள் அதிகரித்து வருவதனால் யூரோவை பயன்படுத்தும் நாணய நாடுகள் கூட பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், " இது தவிர, கொரோனா பரவல் சர்வதேச பொருளாதாரத்தில் எதிர்பாராத பின்னடைவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
வேறு பல பொருளாதார தாக்கம் காரணமாக உலக பொருளாதாரம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் 4 டிரில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் " எனக் குறிப்பிட்டார்.