வைத்தியர் பணியிட மாற்றங்கள் தொடர்பாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
2026 ஆம் ஆண்டிற்கான மருத்துவப் பணியிட மாற்றங்கள் அரசியல் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இன்று (30.03.2026) நடந்த ஊடக சந்திப்பின் போதே வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,
ஒரு நாள் போராட்டம்
இந்த வருடத்திற்கான மருத்துவ பணியிட மாற்ற பட்டியல் எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று ஒருபோதும் நடந்ததில்லை எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்தப் பணியிட மாற்றங்களின் காரணமாக, நாளை காலை 08.00 மணி முதல் நாடு தழுவிய ஓர் நாள் அடையாளப் போராட்டத்தை விருப்பமின்றி மேற்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நாளை (31.03.2026) காலை வரை அவகாசம் உள்ளது என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எந்தவொரு சந்தர்பத்திலும் அவசரகால சிகிச்சை தடை ஏற்படாது என்றும் முறையாக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |