ரணிலை விரட்டும் வரை நிறுத்தப் போவதில்லை..!
ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும் என மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " கோட்டாபய ராஜபக்ச, தனது பாதுகாப்புக்காக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
இன்று கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் ரணில் பதில் அதிபராக பதவிக்கு வந்துள்ளார்.
ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும்
ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆணையை பெற்று இந்த பதவிக்கு வரவில்லை. அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கே மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால், தற்காலிகமாக கூட ரணில் அதிபர் பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகிய பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிப்போம்.
ரணில் விக்ரமசிங்கவை விரட்டும் வரை நாங்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்", எனக் குறிப்பிட்டார்.