ரணிலை பார்க்க சென்றேனா..! ஆதாரத்தை வெளியிடுமாறு பிரதமர் ஹரிணி சவால்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப்(ranil wickremesinghe) பார்க்க தேசிய மருத்துவமனைக்குச் சென்றதற்கான ஆதாரங்கள் இருந்தால், அதை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) சவால் விடுத்துள்ளார்.
இன்று(26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நேற்று(25) பிரதமரைப் பற்றி வெளியிடப்பட்ட தவறான செய்திகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தவறான செய்திகளை உருவாக்குவதற்கு எதிராக நடவடிக்கை
செய்தியை உருவாக்க ஆதாரங்கள் தேவை என்று கூறிய பிரதமர், எதிர்காலத்தில் தவறான செய்திகளை உருவாக்குவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் பிரதமராக ரகசியமாக பயணம் செய்ய முடியாது என்றும், அப்படி தான் சென்றது என்றால் அந்த ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.
செய்தியை வழங்குவதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும்
சென்றவர்களிடமே அவரது உடல்நிலை குறித்து கேட்கப்பட வேண்டும். நேற்று, பிரதமர் அலுவலகம் அதற்கு சரியான பதிலை அளித்தது. தவறான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் போனால், அந்த செய்தியை வழங்குவதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
இதுபோன்ற செய்திகளை காற்றில் இருந்து உருவாக்க முடியாது. நான் போனால், அந்த தகவல் எங்கிருந்து வந்தது? என்னைப் பார்த்தீர்களா? பிரதமராக, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது.
எனவே, நான் போனதை நிரூபியுங்கள். நான் போனதை நிரூபிக்க நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். அப்போது பிரச்சினை தீரும். நான் தவறு. நான் பொய் சொல்கிறேன் என்பதை நீங்கள் நிரூபிப்பீர்கள் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

