நெல்லுக்கான விலை தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு
அரசாங்கம் எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.
நெல் வகைகளின் விலை
சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

"நெல் விலை திருத்தம் தொடர்பாக ஏற்கனவே நாங்கள் விடயங்களை முன்வைத்துள்ளோம். எவ்வாறாயினும், அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.
"நெல் விலை திருத்தம் தொடர்பாக ஏற்கனவே நாங்கள் விடயங்களை முன்வைத்துள்ளோம்.
அரிசி மாஃபியா
குறிப்பாக நாடு நெல் 120 ரூபாவாகவே நீடிக்கும். சம்பா நெல்லின் விலை 125 ரூபாவிலிருந்து 130 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

விவசாயிகளின் தரப்பைப் பொறுத்தவரை கீரி சம்பா 132 ரூபாவிலிருந்து 140 ரூபா வரை அதிகரிக்கப்படும்." என்றார்.
ஏனைய ஆண்டுகளில் இக்காலப்பகுதியில் நாட்டில் 'அரிசி மாஃபியா' செயற்பட்ட போதிலும், இந்த ஆண்டு இக்காலப்பகுதியில் அது இடம்பெறவில்லை" என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |