இலங்கை வாழ் ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை இலங்கை (Srilanka) அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சபரிமலை ஜய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள் தான். விரதமிருந்து இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18 ஆம் படி ஏறிச்சென்று தரிசித்தல் மிகவும் புனிதமாக கருதப்படுகின்றது.
யாத்திரை தலமாக ஆலயம்
அந்தவகையில், இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்குச் சென்று தரிசித்து வருகின்றனர்.
தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்ற யாத்திரை தலமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது.
அதற்கமைய, சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற யாத்திரையை, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கும் அதற்கான வசதிகளை வழங்கவும் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
