கோட்டாபய நாட்டின் மிகப்பெரிய முட்டாள் : அரச தலைவர் அதிகாரத்தை இழந்து விட்டார் : ஓமல்பே சோபித தேரர்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Gota Go Home 2022 Omalpe Sobitha Thero Sri Lanka Anti-Govt Protest
By Steephen Jul 09, 2022 10:57 AM GMT
Report

நாட்டில் இருக்கும் மிகப் பெரிய முட்டாளாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்கள பௌத்த மக்கள் மாத்திரமல்லாது அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களும் தற்போதைய அரச தலைவரின் அதிகாரத்தை சூனியமாக்கியுள்ளனர்.

அது மட்டுமல்ல. கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் 97 வீதமாக மக்கள் அவரை வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளனர்.

கோட்டா கோ என்ற கிராமத்தை காலிமுகத்திடலில் ஆரம்பித்து அது மிகப் பெரிய அமைப்பாக காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவியது. கோட்டாபய தற்போதாவது செல்ல வேண்டும்.

தன்னைத் தானே முட்டாள் எனக் கூறும் கோட்டாபய எங்களை புத்திசாலித்தனமாக நடக்குமாறு கூறுகிறார்

ராஜபக்ச குடும்பத்தில் முட்டாள் தான் எனக் கூறும் அரச தலைவரே நேற்று மாலை அறிக்கையை ஒன்றை வெளியிட்டு மக்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு கூறினார்.

மக்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு அவர் நேற்று மாலை கூறினார். புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு மக்களை யாரை கூறினர்? ராஜபக்ச குடும்பத்தில் நான் முட்டாள் என அவரே கூறுகிறார்.

கோட்டாபய நாட்டின் மிகப்பெரிய முட்டாள் : அரச தலைவர் அதிகாரத்தை இழந்து விட்டார் : ஓமல்பே சோபித தேரர் | Gota Fool He Must Resign Post

ராஜபக்ச குடும்பத்தில் முட்டாள் தான் என அவரே தனது வாயால் கூறுகிறார். அந்த முட்டாள் எங்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கின்றார்.

நாட்டில் இருக்கும் மிகப் பெரிய முட்டாளாக கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார். இதனால், அவர் தற்போது மறைந்திருக்கும் இட்த்தில் இருந்துக்கொண்ட அரச தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும்.

புதிய அரச தலைவரை தெரிவு செய்ய வேண்டும் - ரணிலை ஒரு நொடிக்கு கூட அந்த பதவியில் நியமிக்கக்கூடாது

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் அரச தலைவரின் அதிகாரங்கள் மக்களின் அதிகாரத்தால் சூனியமாக்கப்படும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சபாநாயகர், கட்சித் தலைவர்களை கூட்டி தீர்மானத்தை எடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி, நாட்டு மக்களின் உண்மையான பலம் மற்றும் விருப்பத்தை வென்றெடுத்துள்ள நபரை அரச தலைவராக நியமித்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

சபாநாயகருடன் நான் கதைத்தேன். உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதாக சபாநாயகர் கூறினார். நாட்டில் அரச தலைவர் ஒருவர் இல்லை.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் ஒன்றை எடுங்கள். புதிய அரச தலைவரை நியமிக்க வேண்டும். அவர் கட்சித்தலைவராக மாத்திரமல்ல, நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்.

கோட்டாபய நாட்டின் மிகப்பெரிய முட்டாள் : அரச தலைவர் அதிகாரத்தை இழந்து விட்டார் : ஓமல்பே சோபித தேரர் | Gota Fool He Must Resign Post

நாடாளுமன்றத்தில் அரச தலைவரை தெரிவு செய்ய முடியாது என்றால், தேசியப் பட்டியல் ஊடாக சிவில் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க என்ற பொம்மையை அரச தலைவராக தெரிவு செய்யக்கூடாது. மாளிகை சூழ்ச்சியின் மூலம் ரணில் விக்ரமசிங்க என்ற நபரை நாட்டின் அரச தலைவராக ஒரு நொடிக்கு கூட நியமிக்கக் கூடாது எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மக்களின் பலம் இல்லை எனவும் அவரை தொடர்ந்தும் அரச தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வ மத தலைவர்கள் கூறியுள்ளனர். 

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015