ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் இந்தக் கைதுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஏற்கனவே பயணத் தடை
அதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்கனவே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தச் செயல்முறை அரசியல் நலன்களின் அடிப்படையில் நடத்தப்படும் ஒரு அரசியல் வேட்டை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபf்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்