சுரேஷ் சலே வைத்தியசாலையில் : மனைவியிடமிருந்து சிஐடிக்கு பறந்த அவசர கடிதம்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (07) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி அனுப்பியுள்ள கடிதத்தில், எனது கணவர் சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விடுத்துள்ள கோரிக்கை
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் எனது கணவரை, எனக்கும், எனது பிள்ளைக்கும் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், எனது கணவர் சார்பாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்டத்தரணிகளுக்கு, அவரைச் சந்திப்பதற்கான அனுமதியை வழங்குங்கள்.

எனது கணவர் தற்போது மேற்கொண்டு வரும் ஆபத்தான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு அவரை ஊக்குவிக்க, சட்டத்தரணிகளின் சந்திப்பு பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும், இந்தத் தீர்மானமிக்க இக்கட்டான தருணத்தில் எனது கணவருக்கு மருத்துவச் சிகிச்சை மட்டுமன்றி, சட்ட ரீதியான மற்றும் மன ரீதியான ஆதரவும் மிகவும் அத்தியாவசியமானது “என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 12 மணி நேரம் முன்