சிங்கப்பூரில் அரச பாதுகாப்புடன் தங்கியிருக்கும் கோட்டாபய - வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விஜயம் நாளை (11) காலாவதியாகவிருந்த நிலையில், அவர் மேலும் சில வாரங்கள் தங்குவதற்கு விசா வசதிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில். இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு முழு பாதுகாப்புடன் குடியிருப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், சிங்கப்பூரில் மிகவும் விலையுயர்ந்த விடுதியில் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானாது எனவும், எனினும் அவர் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,