மகிந்த தொடர்பில் எடுக்கப்பட்ட கடுமையான முடிவு! மன வேதனையை பகிரங்கப்படுத்திய கோட்டாபய
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
By S P Thas
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவை நீக்குவதே தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான தீர்மானம் என்று சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினருடனான சந்திப் போதே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடினமான முடிவு
நாட்டுக்காக தான் அந்த கடினமான தீர்மானத்தை எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தனது விருப்பத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் நம்பிக்கை
ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து அவரை பிரதமராக நியமித்தேன். அந்த நம்பிக்கைக்கமைய, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் தமக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.