வெளிச்சத்துக்கு வந்த கோட்டாபயவின் ரகசிய திட்டம்

election Gotabaya Rajapaksa Dewalehinda Ajitha Thero
By Vanan Oct 14, 2021 05:04 PM GMT
Report

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ள தேவால் ஹிந்த அஜித தேரர் (Dewalehinda Ajitha Thero), மக்கள் நலன் கருதி செயற்படாத அரசாங்கங்கள் நீண்டகாலம் நிலைக்காது என, முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி பதிவில் கூறியுள்ளார்.  

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏமாந்த போதிலும் இலங்கையில் அரசியல் ரீதியாக வரலாற்றை பார்க்கும்போது காலா காலத்திற்கும் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியுள்ளனர்.

இலவசமாக உரம் கொடும்போம் என கோட்டாபய கூறினார். எனினும் இன்று விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மக்கள் இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நம்பினார்கள். ஆனால் இறுதியில் ஏமாந்துவிட்டார்கள்.

அடுத்த தேர்தல் வரும் போது இதேபோன்று பல பொய்யான வாக்குறுதிகளை வழங்குவார்கள், தயவு செய்து நம்பிவிட வேண்டாம். அனைத்து மக்களும் நன்றாக சிந்திக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி செய்யும் இந்த அரசியலை நிறுத்த வேண்டும்.

கடந்த நாட்களில் பேசப்பட்ட நிருபமா ராஜபக்ச இலங்கை மக்களின் பணத்தை மோசடி செய்து கறுப்பு பணமாக வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று ஒவ்வொரு வங்கி கணக்குகளில் பதுக்கி வைத்துள்ளனர். இவ்வாறு நாட்டு மக்கள் உழைத்த பணத்தை திருடி முழுப் பரம்பரைக்கும் அவர் சேர்த்துவிட்டார்.

இவர்கள் இப்படியெல்லாம் மோசடி செய்து விட்டு நாட்டு மக்களுக்கு ஒருவேளை மாத்திரம் சாப்பிடுங்கள், கஞ்சியை குடித்து வாழுங்கள், முடிந்தால் சாப்பிடாமல் இருங்கள் எனச் சொல்லும் அளவிற்கு இந்த அரசியல்வாதிகள் மாறியுள்ளார்கள்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியை பிடிக்கும் போது கிழங்கு என்ன விலை? எரிவாயு என்ன விலை? எனக் கேட்டார். எனினும் இன்று என்ன நடக்கிறது?

இந்த அரச தலைவர் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க பார்க்கின்றார். அது என்றும் நடக்கவே நடக்காது.

இன்னும் கொஞ்சம் நாட்களில் நாட்டு மக்கள் இவரை அடித்து விரட்டுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் வெறுப்புடன் இருக்கின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி