வெளிச்சத்துக்கு வந்த கோட்டாபயவின் ரகசிய திட்டம்

election Gotabaya Rajapaksa Dewalehinda Ajitha Thero
By Vanan Oct 14, 2021 05:04 PM GMT
Report

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ள தேவால் ஹிந்த அஜித தேரர் (Dewalehinda Ajitha Thero), மக்கள் நலன் கருதி செயற்படாத அரசாங்கங்கள் நீண்டகாலம் நிலைக்காது என, முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி பதிவில் கூறியுள்ளார்.  

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏமாந்த போதிலும் இலங்கையில் அரசியல் ரீதியாக வரலாற்றை பார்க்கும்போது காலா காலத்திற்கும் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியுள்ளனர்.

இலவசமாக உரம் கொடும்போம் என கோட்டாபய கூறினார். எனினும் இன்று விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மக்கள் இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நம்பினார்கள். ஆனால் இறுதியில் ஏமாந்துவிட்டார்கள்.

அடுத்த தேர்தல் வரும் போது இதேபோன்று பல பொய்யான வாக்குறுதிகளை வழங்குவார்கள், தயவு செய்து நம்பிவிட வேண்டாம். அனைத்து மக்களும் நன்றாக சிந்திக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி செய்யும் இந்த அரசியலை நிறுத்த வேண்டும்.

கடந்த நாட்களில் பேசப்பட்ட நிருபமா ராஜபக்ச இலங்கை மக்களின் பணத்தை மோசடி செய்து கறுப்பு பணமாக வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று ஒவ்வொரு வங்கி கணக்குகளில் பதுக்கி வைத்துள்ளனர். இவ்வாறு நாட்டு மக்கள் உழைத்த பணத்தை திருடி முழுப் பரம்பரைக்கும் அவர் சேர்த்துவிட்டார்.

இவர்கள் இப்படியெல்லாம் மோசடி செய்து விட்டு நாட்டு மக்களுக்கு ஒருவேளை மாத்திரம் சாப்பிடுங்கள், கஞ்சியை குடித்து வாழுங்கள், முடிந்தால் சாப்பிடாமல் இருங்கள் எனச் சொல்லும் அளவிற்கு இந்த அரசியல்வாதிகள் மாறியுள்ளார்கள்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியை பிடிக்கும் போது கிழங்கு என்ன விலை? எரிவாயு என்ன விலை? எனக் கேட்டார். எனினும் இன்று என்ன நடக்கிறது?

இந்த அரச தலைவர் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க பார்க்கின்றார். அது என்றும் நடக்கவே நடக்காது.

இன்னும் கொஞ்சம் நாட்களில் நாட்டு மக்கள் இவரை அடித்து விரட்டுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் வெறுப்புடன் இருக்கின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.  

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026