பிள்ளையானின் சிறைச் சந்திப்பில் வெளியாகிய விடயம்! கோட்டாபய - சாலேவுக்கு வலைவீச்சு

Easter Attack Sri Lanka Sri Lanka Navy Udaya Gammanpila Crime Branch Criminal Investigation Department Ananda Wijepala
By Dharu Sep 03, 2025 08:16 AM GMT
Report

தற்போதைய அரசாங்கம் பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்து பெரும் நாடகம் ஒன்றை நடத்திவருவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தான் சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒன்றும் கேட்கவும் இல்லை எனக்கு ஒன்றும் தெரியாது என கூறியதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் பொதுப் பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இலங்கையில் இருக்கும் பெரும் பொய்யர்கள்.

மூடப்பட்ட மாவிலாறு அணை : இறுதி யுத்தத்தின் திருப்புமுனையான சரத் பொன்சேகாவின் முடிவு

மூடப்பட்ட மாவிலாறு அணை : இறுதி யுத்தத்தின் திருப்புமுனையான சரத் பொன்சேகாவின் முடிவு

வசந்த கரன்னாகொட

2017 ஆம் ஆண்டு விஜயகாந்தன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் புலனாய்வு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார்.

பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நிசாந்த கந்தப்பா என அழைக்கப்படுபவரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டோ கிசான் வெலகெதர ஆகியோர் இணைந்து குறித்த விஜகாந்தனை வேலையில் இருந்து அகற்றுவதாக தெரிவித்து, பொய்சாட்சியம் கூற சொல்லி சில ஆவணங்களில் கையொப்பம் பெற்றுக் கொள்கின்றனர்.

பிள்ளையானின் சிறைச் சந்திப்பில் வெளியாகிய விடயம்! கோட்டாபய - சாலேவுக்கு வலைவீச்சு | Gotabaya Suresh Sale To Be Arrested By Pillaiyaan

அவருக்கு சிங்களம் வாசிக்க தெரியாது. கதைக்க மட்டும் தான் தெரியும். குறித்த ஆவணங்களை வைத்துக் கொண்டு தான் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, நிசாந்த உலுகேதென்ன, சுனித் ரணசிங்க மேலும் பலரை பொய்யான வழக்கில் சம்பந்தப்படுத்த தான், நிசாந்த சில்வா மற்றும் கொமாண்டோ கிசான் வெலகெதர ஆகியோர் இந்த பொய்சாட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

விஜகாந்தன் இது பற்றி எனக்கு தெரிவித்த நிலையில் நான் 2017 டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக முன்னிலையாகி இவரிடம் பொய்சாட்சியம் பெறப்பட்டுள்ளது

இவருக்கு சிங்களம் வாசிக்க கூட தெரியாது, இவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தேன். பின்னர் நீதிபதி அவர்கள் 2018 ஜனவரி 02 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை பெற்றுக் கொள்கிறார்.

இஷாரா செவ்வந்தி மீது திரும்பிய பார்வை: ஆரம்பமானது சிறப்பு விசாரணை

இஷாரா செவ்வந்தி மீது திரும்பிய பார்வை: ஆரம்பமானது சிறப்பு விசாரணை

ரவி செனவிரத்ன 

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன தலைமையில் பொய்சாட்சி பெறப்பட்டமை தொடர்பில் நான் உண்மைகளை வெளிப்படுத்தி அதை முறியடித்தேன். என்னிடம் அவர்கள் வைராக்கியம் கொள்வதற்கான முதல் காரணம் இதுவாகும்.

பிள்ளையானின் சிறைச் சந்திப்பில் வெளியாகிய விடயம்! கோட்டாபய - சாலேவுக்கு வலைவீச்சு | Gotabaya Suresh Sale To Be Arrested By Pillaiyaan

இரண்டாவது காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்ன குற்றவாளியாக காட்டப்படுகிறார்.

அதனால் அவருக்கு பதவி வழங்க முடியாததால் தற்போதைய ஜனாதிபதி விசாரணை அறிக்கையை வெளியிட மறுக்கிறார்.

நான் அவர் மறைத்த பகுதிகளை வெளிப்படுத்தினேன். இரண்டாவது தடவையும் ரவி செனவிரத்னவின் பொய்களை வெளிபடுத்தியதால் மேலும் என் மேல் கோபம் கொள்கிறார்.

அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானை கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கியமான தகவல்களை குற்றிப்பிட்டதாக சொன்னார்.

பத்மே உட்பட 5 பேருக்கு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு

பத்மே உட்பட 5 பேருக்கு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு

நிஷாந்த உலுகேதென்ன

நான் பிள்ளையானை சந்திக்க பலவாறான சட்டங்களை கொண்டு சட்டத்தரணியாக சென்றிருந்தேன். அவரை யாருக்கும் சந்திக்க முடியாத நிலையிருந்தது.

நான் சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்து பேசினேன். அப்போது அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒன்றும் கேட்கவும் இல்லை எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

பிள்ளையானின் சிறைச் சந்திப்பில் வெளியாகிய விடயம்! கோட்டாபய - சாலேவுக்கு வலைவீச்சு | Gotabaya Suresh Sale To Be Arrested By Pillaiyaan

நான் அதை நாட்டுக்கு தெரியப்படுத்தினேன். அரசாங்கம் பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்து பெரும் நாடகம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

அதுவும் என்னால் முடியாமல் போய்விட்டது. இறுதியாக நிஷாந்த உலுகேதென்ன கைதில், பாரதி அல்லது தம்பிள்ளை மகேஷ்வரன் என்ற திருகோணமலையை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவரின் சாட்சிகள் பெறப்பட்டுள்ளது.

அதுவும் புனையப்பட்ட பொய்சாட்சி என்று தான் 2025 ஓகஸ்ட் 05 ஆம் திகதி ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தேன்.

மோடிக்கு முதலிடம் வழங்கிய சீன வலைத்தளங்கள்!

மோடிக்கு முதலிடம் வழங்கிய சீன வலைத்தளங்கள்!

புனையப்பட்ட சாட்சி

அவை நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தப்பட்டது. நான்கு தடவைகள் அரசாங்கத்தால் புனையப்பட்ட சாட்சிகளை கொண்டு சிறைப்படுத்தும் நாடகங்களை நான் முறியடித்தேன்.

பிள்ளையானின் சிறைச் சந்திப்பில் வெளியாகிய விடயம்! கோட்டாபய - சாலேவுக்கு வலைவீச்சு | Gotabaya Suresh Sale To Be Arrested By Pillaiyaan

ஆதலால் நான் இருந்தால், இவர்களால் புனையப்பட்ட சாட்சிகளில் யாரையாவது கைது செய்து, நாங்கள் கள்வர்களை பிடித்து விட்டோம் என மக்களுக்கு நடத்தும் நாடகத்தை செய்ய முடியாது என்பதால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறினார், யாரையாவது கைது செய்ய முடியாவிட்டால் சட்டம் இயற்றியாவது சிறையில் அடைப்போம் என்றார்.

அவ்வாறான சட்டம் ஒன்றே ICCRP ஆகும். நான் இதற்கு அஞ்சப் போவதில்லை இரு கிழமைகளின் பின்னர் நான் நாட்டுக்கு வருவேன்” என கூறியுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020