பசிலின் உரையை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்திய கோட்டாபய! (காணோளி)
கடந்த 12ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa) ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இடையில் நிறுத்தியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சபாநாயகருக்கு கை சமிக்ஞை வழங்கிய அரச தலைவர், வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஒத்திவைக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன், பிற்பகல் 3.30 மணியிலிருந்து 10 நிமிடங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தை ஒத்திவைத்தார்.
பசில் ராஜபக்ச மிகவும் சிரமப்பட்டு வரவு செலவுத் திட்டத்தை வாசிப்பதை, அரச தலைவர் மற்றும் பிரதமருக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானித்ததை அடுத்தே அரச தலைவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அரச தலைவரும் பிரதமரும் அமர்ந்திருந்த ஒரே வரிசையில் பசில் அமர்ந்திருந்த நிலையில், பவித்ரா வலதுப்புறம் அமர்ந்திருந்தமையினாலும் அவர் சமாந்தரமாக அமர்ந்திருந்தமையினாலும் பசிலின் சங்கடத்தை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
சபை ஒத்திவைக்கப்பட்டவுடனேயே அரச தலைவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலர் பசிலை நாடாளுமன்றத்தில் உள்ள அரச தலைவர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேரச் செய்திகளின் தொகுப்பு,