கொள்ளையடிக்கும் முயற்சியில் ராஜபக்க்ஷ குடும்பம் - ரோஹிணி குற்றச்சாட்டு
உற்பத்திப் பொருட்களின் கொள்வனவு அனுமதிப் பத்திரங்களை அரசாங்கம் தங்களின் குடும்ப நண்பர்களுக்கு வழங்கி டீல் கொள்வனவின் பக்கம் மறைமுகமாக செல்வார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். கோஸ் உற்பத்தி நம் நாட்டின் முக்கிய உள்ளூர் தொழில்களில் ஒன்றாகும்.
அந்த தொழிலுக்கு எதுவும் நடக்கவில்லை என்பது இந்த அரசாங்கத்தில் ஒர் நல்ல அதிர்ஷ்டம் போன்று உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு - எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், அரசாங்கம் கோஸ் உற்பத்தி தொழிலை கண்டும் காணாமலும் கிடப்பில் போட்டுள்ளனர். அண்மையில் இந்த அரசாங்கம் கோஸிற்காக 770 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
இது முற்றிலும் போலியான செய்தியாகும். இறக்குமதிகள் இடம்பெறவில்லை. சகல கோஸ் உற்பத்திகளும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தளவு பாரிய நிதியை ஒதுக்கி ராஜபக்க்ஷ குடும்பம் கொள்ளையடிக்க முயல்கின்றனர். அதே போல் இத் தொழில் சார்ந்த தேவைப்பாடுடைய 40% நூலை பெற்றுக் கொடுத்து. இந்த கிராமிய பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த அரசாங்கம் இத்துறை சார்ந்த கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அனுபதிப் பத்திரங்களை தனியார் துறையிடமிருந்து அரசாங்கம் பெற்றுள்ளது என்றால் இந்த கொள்வனவு விதிமுறை விடயங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இத்துறை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் கொள்வனவு அனுமதிப் பத்திரங்களையும் அரசாங்கம் தங்களின் குடும்ப நண்பர்களுக்கு வழங்கி டீல் கொள்வனவின் பக்கம் மறைமுகமாக செல்வார்களோ என்ற சந்தேகம் எமக்குள்ளது.
இத் தொழில் துறையில் தங்கியுள்ள சாதாரண மக்களின் உழைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
"இது இலங்கையின் சிறு கைத்தொழில்களிடையே ஒரு கிராமப்புற தொழில்”இன்று இலங்கையில் இது சார்ந்த நவீன உற்பத்தி இயந்திரங்களுடன் எந்த தொடர்பும் இல்லை, இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.