சர்வதேசத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வெற்றிகரமான செயற்பாடு - கோட்டாபய பெருமிதம்
srilanka
trincomalee
gotabhaya rajapaksa
By Vasanth
வெளிநாடுகளுடன் ஒப்பீடு செய்கையில் இலங்கையில் கொவிட் கட்டுப்பாடு சிறந்த முறையில் காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கியுலேகொட பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்
கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.