அரசாங்கத்துக்குள் வெடித்தது முரண்பாடு - ஒப்புக்கொண்டார் அமைச்சர் கம்மன்பில
அரசாங்கத்தை அழிப்பதை விடுத்து அதனை பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்திற்குள் ஒரு பெரும் போராட்டத்தை தாம் நடத்திவருவது உண்மையே என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
20 ஆது திருத்தத்தின் சில உட்பிரிவுகள் அரசாங்கத்தால் பெறப்பட்ட ஆணைக்கு முரணானவை எனவும் அவர் தெரிவித்தார்.
“பெறப்பட்ட ஆணையை நாங்கள் பாதுகாக்கிறோம் என்றால், 20 வது திருத்தம் அது வந்த வழியில் வந்திருக்காது. நாங்கள் ஆணையைப் பாதுகாக்கிறோம் என்றால், கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் எண்ணம் கூட இந்த அரசாங்கத்தின் தலைவர்களின் மனதில் வந்திருக்காது, அவர்கள் ஆணையைப் பாதுகாக்கிறார்களானால், நமது அரசியல் தலைவர்கள் சட்டம் ஒழுங்கை துன்புறுத்தும் முடிவுகளை எடுக்க மாட்டார்கள் ”என்று அவர் கூறினார்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பணியாற்றிய முன்னோடிகள் என்ற வகையில், அவர்களுக்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களின் விருப்பத்திற்கு எதிரான அரசாங்கத்தின் தவறுகளை சரிசெய்வது தமது கடமை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.