உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சர்ச்சை : அநுர தரப்பு அளித்த பதில்

Sri Lanka Easter Attack Sri Lanka Nalinda Jayatissa
By Harrish Apr 09, 2025 12:37 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடைய நபர்களை விசாரிக்காமல் பாதுகாக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முயற்சிப்பதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa)  மறுத்துள்ளார்.

ஊடக சந்திப்பில் நேற்று (08.04.2025) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள்.

கனடாவில் தீவிரமாகும் தட்டம்மை நோய்: அமெரிக்காவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் தீவிரமாகும் தட்டம்மை நோய்: அமெரிக்காவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சட்ட நடவடிக்கை

தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சர்ச்சை : அநுர தரப்பு அளித்த பதில் | Gov Did Not Protect Anyone In Easter Attack Crime

மேலும், இந்த வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதிரடியாக கைதான பிள்ளையான்: மட்டக்களப்பில் வெடிகொழுத்தி கொண்டாட்டம்

அதிரடியாக கைதான பிள்ளையான்: மட்டக்களப்பில் வெடிகொழுத்தி கொண்டாட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.

இதில், வெளிநாட்டவர்கள், காவல்துறை உள்ளிட்ட குறைந்தது 272 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சர்ச்சை : அநுர தரப்பு அளித்த பதில் | Gov Did Not Protect Anyone In Easter Attack Crime

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன.

ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்ஸ்பரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளில் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

12500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த உயிரினத்துக்கு புத்துயிர் அளித்து சாதனை: எலான் மஸ்க் விடுத்த வேண்டுகோள்

12500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த உயிரினத்துக்கு புத்துயிர் அளித்து சாதனை: எலான் மஸ்க் விடுத்த வேண்டுகோள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்