ஆணவத்துடன் செயற்படும் அரசாங்கம் ஒரு வைரஸ் - எதிர்க்கட்சி கடும் சாடல்
உண்மையான முடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்தால் இறப்பு எண்ணிக்கையை இதைவிடவும் குறைத்திருக்கலாம். ஆணவத்துடன் தொடர்ந்து செயல்படும் அரசாங்கம் ஒரு வைரஸாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று, 12,000 க்கும் அதிகமான மக்கள் அரசாங்க வைரஸால் இறந்துள்ளனர், இது கொரோனா வைரஸை விட ஆபத்தானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள தெிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தின தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த வைரஸ் நாட்டிற்குள் நுழையாமல் நாட்டை மூடுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டபோது, நாட்டை மூட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தனர்.
வைரஸ் பரவாமல் பாதுகாக்க முகக்கவசங்களை இறக்குமதி செய்யப்பட்டனவா என்று கேட்டபோது, அது தேவையில்லை என்றனர். தடுப்பூசியைக் கொண்டு வரும்படி கேட்டபோது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அத்தகைய தேவை ஒன்று இல்லை என்று தெரிவித்தார்.
தெளிக்கப்பட்ட பானைகள் ஆறுகளில் வீசப்பட்டன. இப்போது பானி தயாரித்த நபருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. அதைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை.
பின்னர் தம்மிக பானம் கொண்டு வந்தார்கள். பின்னரே தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. இன்று இந்த மக்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்று நாங்கள் சொன்னது போல் தான் பேசுகிறார்கள்.
அரசாங்கத்தின் வைரஸ் மிகவும் வலுவானது, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இன்னும் பலருக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அரசாங்கம் தடுப்பூசியை சரியான நேரத்தில் கொண்டு வராததால் தான் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. மக்களுக்கு வைரஸாக இருக்கும் இந்த அரசாங்கம் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
கொரோனா வைரஸால் இறந்தவர்களில் பெரும்பாலோர் மூன்றாவது அலையிலிருந்தே இறந்தனர். முதல் அலை, மற்றும் இரண்டாவது அலைகளின் போது இது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை.
நாட்டை மூடுவதற்கு சுகாதாரத் துறை அழைப்பு விடுத்தபோது, மக்கள் நாடு முழுவதும் சென்று இறப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். விஷேட மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி நாட்டை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சியாகிய நாங்கள் அழைப்பு விடுத்தோம்.
ஆனால் அவருடைய மக்கள் துரோக மற்றும் ஆணவத்தின் காரணமாக யாரும் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் மக்களின் கருத்துக்களைக் கேட்பதில்லையாததால் அரசாங்கத்திற்கு எதிரான வைரஸாக செயல்படுகிறார்கள்.
உண்மையான முடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்தால் இறப்பு எண்ணிக்கையை இதைவிடவும் குறைத்திருக்கலாம்.
ஆணவத்துடன் தொடர்ந்து செயல்படும் அரசாங்கம் ஒரு வைரஸாகும். இந்த அரசாங்கம் தான் முடக்கத்தையும் தாமதப்படுத்தியது. மொட்டு வைரஸ் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.