வடக்கில் நான்கு மருத்துவமனைகளை கையகப்படுத்தவுள்ள அரசு
Parliament of Sri Lanka
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
Northern Province of Sri Lanka
Nalinda Jayatissa
By Sumithiran
வடக்கு மாகாணத்தில், மாகாண சபைகளின் கீழ் செயற்படும் 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று(15) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் ஏழு மருத்துவமனைகள்
மாகாண சபைகளின் கீழ் உள்ள மொத்தம் 7 மருத்துவமனைகளை, மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தயாராக உள்ளதாக, அவர் அறிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள 3 மருத்துவமனைகளையும், வடமாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளையும் இவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மாகாண சபைகளின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி