அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.
செலவுத் திட்டம்
அரச சேவையை வினைத்திறனாக்குவதற்கு டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல மில்லியன் ரூபா நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனுடன், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள்
அத்தோடு, குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது அவர்களின் விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது தொடர்பில் காவல்துறை மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்றே காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை தடுக்க வேண்டிய தேவையோ அல்லது நோக்கமோ அரசாங்கத்துக்கு கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |