இலங்கை வரவுள்ள அவுஸ்திரேலியாவின் முக்கிய பிரதிநிதி
அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், 2025 ஆகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஆளுநர் ஜெனரல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயத்தின் நோக்கம்
அத்தோடு, அவர் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் அவுஸ்திரேலியாவால் ஆதரிக்கப்படும் பல திட்டங்களையும் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயம் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
