எரிபொருள் மானியம் மீண்டும் நடைமுறை! அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு
வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வளைகுடாப் பகுதியில் நிலைமை சீரடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த எரிபொருள் மானியத்தை, ஜூன் மாதத்தில் அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது.
இருப்பினும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரிப்பதால், அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எரிபொருள் விலை
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தற்போதுள்ள எரிபொருள் விலையை மாற்றாமல், அதற்கான கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டியிருக்கும்.

முந்தைய மானியத் திட்டத்தின் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ. 100 மற்றும் ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு ரூ. 20 மானியம் வழங்கப்பட்டது, இதற்காக அரசு ரூ. 57 பில்லியன் ஒதுக்கியிருந்தது.
இது தொடர்பாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யா நிறுவனங்கள்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவின் அரசுடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்து, கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.
சந்தையில் ரஷ்ய நிறுவனங்களின் நுழைவு, போட்டியை அதிகரிப்பதோடு, உள்நாட்டு எரிபொருள் விலைகளை நிலையாகப் பராமரிக்கவும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 9 மணி நேரம் முன்