விவசாயிகளுக்காக புதிய வங்கி! அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி
தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அதிக வட்டி வீததில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் போது வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது, குறித்த வங்கி மூலம் ஏக்கருக்கு ரூ. 1,00,000 உற்பத்திச் செலவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளின் தேவைகள்
மேலும், சீனாவுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒவ்வொரு விவசாயத் தொழிலுக்கும் ஒரு வேளாண்மை ஆதரவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலகின் மிகவும் மேம்பட்ட இயந்திரங்கள், பெரிய உழவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள், களை எடுக்கும் மற்றும் கட்டும் இயந்திரங்களை தாங்கள் கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, விவசாயிகளின் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்ய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யும் என பிரதி அமைச்சர் சரத் தொடர்ந்தம் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |